×

சிவகாசி அருகே குடியிருப்பில் புகுந்த கண்மாய் நீர் அகற்றம்: நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

சிவகாசி: சிவகாசி அருகே, பள்ளப்பட்டி ஊராட்சியில் கடம்பன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயையொட்டி பள்ளபட்டி, நேரு காலனி, விவேகானந்தர் காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி ஆகியவை உள்ளன. இந்த பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மதகு மற்றும் நீர்ப்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதால், அருகில் உள்ள நேரு காலனி, விவேகானந்தர் காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் ஆர்டிஒ விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், பிடிஓக்கள் சீனிவாசன், ராமமூர்த்தி, பள்ளபட்டி ஊராட்சி தலைவர் உசிலை செல்வம் ஆகியோர் கண்மாயை நேரில் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்புகள் காரணமாக மதகுகள் வழியாக தணணீரை வெளியேற்ற முடியாத சூழ்நிலையில் 2 மோட்டர்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கண்மாய் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வருவதிலும் தண்ணீர் வெளியேற்றுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு 1வது வார்டு கவுன்சிலர் லோகேஸ்வரி அனுப்பியுள்ள மனுவில், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சியில் உள்ள கடம்பன்குளம் கண்மாயிலிருந்து வெளியேறும் மதகு மற்றும் நீர்வழிப்பாதை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், கண்மாய் நீர் முழுவதும் நிரம்பி வெளியேறுவதற்கு வழியில்லாமல் கண்மாயின் பின்பகுதியில் உள்ள நேருகாலனி, விவேகானந்தர் காலனி மற்றும் முத்துராமலிங்கபுரம் காலனி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே கடம்பன்குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்….

The post சிவகாசி அருகே குடியிருப்பில் புகுந்த கண்மாய் நீர் அகற்றம்: நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Kadampankulam Kanmai ,Pallapatti ,Kanmai ,Nehru Colony ,Vivekananda Colony ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!